Wednesday, 4 December 2024

ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை

ஆயுர்வேத பஞ்சகர்மா என்பது உடலிலிருந்தும் மனதிலிருந்தும் நச்சுக்களை வெளியேற்றி, அவற்றுக்கு புத்துயிர் அளிக்க உதவும் சுத்திகரிப்பு சிகிச்சை முறைகளாகும். ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை என்பது ஐந்து சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது. அவை உடலில் சேர்ந்த நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகின்றன. மேலும் அவை ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வமனம், விரேசனம், வஸ்தி, நஸ்யம், ரக்தமோக்ஷணம் ஆகியவை தான் பஞ்ச கர்மா சிகிச்சைகள் ஆகும்.

அதற்கான வழிமுறைகள் என்ன?

பஞ்சகர்ம சிகிச்சையும் 3 முக்கிய அங்கங்களை கொண்டது. அவை பூர்வ கர்மம் (தயார் படுத்தும் சிகிச்சைமுறை), பிரதான கர்மம் (முதன்மை சிகிச்சை முறை) மற்றும் பஸ்சாத் கர்மா (முக்கிய சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சை முறை).

பூர்வ கர்மா

பூர்வ கர்ம என்பது பஞ்சகர்மா சிகிச்சைகளின் முதல் படியாகும், இது பிரதான கர்மாவிற்கு உடலை தயார்படுத்துகிறது. மருத்துவ ஆலோசனை, பரிசோதித்தல், உணவுமுறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவற்றுடன் பூர்வ கர்மம் தொடங்குகிறது. சிநேகனம் (எண்ணெய் தேய்ப்பு & நெய் மருந்துகளை உட்கொள்ளல்) ஸ்வேதனம் (வியர்வை தருவிக்கும் சிகிச்சை) ஆகியவற்றுடன் தொடங்குகிறது.

இந்த சிகிச்சைகள் உடலில் இருந்து ஆமத்தையும் நச்சுக்களையும் அகற்ற உதவுவதுடன் அவற்றை செரிமான மண்டலத்திற்கு நகர்த்துகிறது.

பிரதான கர்மா

பிரதான கர்மம் என்பது பஞ்சகர்மா சிகிச்சைகளில் இரண்டாவதும் முக்கியமானதுமான படிநிலையாகும். வமனம் (வாந்தி), விரேச்சனம் (குடல் சுத்திகரிப்பு), வஸ்தி (எனிமா), நஸ்யம் (நாசி மருந்து) மற்றும் ரக்தமோக்ஷணம் (இரத்த வெளியேற்றம்) போன்ற சிகிச்சைகளைப் பயன்படுத்தி உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சிகிச்சைகள் தனிநபரின் பிரகிருதி, தோஷம் (வாதம், பித்தம், கபம்) மற்றும் தூஷ்யம் (ஏழு தாதுக்கள் மற்றும் மூன்று மலங்கள்) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பஷ்சாத் கர்மா

பஷ்சாத் கர்மா என்பது பஞ்சகர்ம செயல்முறையின் மூன்றாவது படிநிலையாகும், இது நச்சு நீக்கத்திற்குப் பிறகு உடலை குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் உதவுகிறது. புத்துயிர்ப்பு சிகிச்சைமுறை என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கான உணவு, வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற அறிவுறுத்துகிறது.


Tuesday, 29 October 2024

Deepavali wishes

 


 Proudly launched 

THE PRITHVI

your complete Ayurveda companion
App
today on the occasion of
NATIONAL AYURVEDA DAY
&
LORD DHANVANTARI JEYANTHI

A learning app for oth Ayurveda students and vaidyas as well.


Thursday, 22 August 2024

காந்தியும் ஆயுர்வேதமும்

 (ஃபிப்ரவரி 2020 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை)

Pc- Mkgandhi.org, Illustartion from Bahuroopi Gandhi


வானத்திற்கு கீழே அனைத்தையும் பற்றி காந்தி சில கருத்துக்களை கொண்டிருந்தார். எழுதி, நிறுவி, முன்னகர்ந்து என ஓயாமல் அலையடித்துக்கொண்டிருந்தது அவருடைய கருத்துலகம். இத்தனை பரந்த விரிந்த கருத்துலகம் என்பதாலேயே அவரை வரையறுப்பதில் சிக்கல்கள் எழுகின்றன. நமக்குத் தேவையான காந்தியை மேற்கோள்களின் ஊடாக வெட்டியொட்டி உருவாக்கிவிட முடியும். காந்தி இங்கு எல்லாருக்கும் தேவைப்படுகிறார். சில நேரங்களில் கரம் கோர்க்கவும்  சில நேரங்களில் எதிர் நிறுத்தவும். 

Monday, 17 July 2017

விருது அறிமுக உரை

(ஜூலை 15 2017 அன்று நிறைவடைந்த விருதுவிழாவில் வாசிக்கப்பட்ட விருது அறிமுக உரை.)

அரிமளம் வைத்தியர் என்று அறியப்படும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தந்தையிடமிருந்து குருமுகமாக மிக இளம் வயதிலேயே சித்த மருத்துவத்தை பயின்றவர். இப்பகுதி என்றில்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாடுகளில் இருந்தும் அவரைக் காண நோயுற்றவர்கள் வருவதுண்டு. நிதானமான பேச்சும், எளிமையும், குறைந்த செலவும் அரிமளம் வைத்தியரின் முக்கிய பண்பாக கருதப்படுகிறது. அவ்வகையில் அவருடைய பங்களிப்பை நினைவுகூறும் வகையில் அவர் பெயரில் இந்திய மருத்துவ வளர்ச்சிக்கு பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு ஒரு வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒரு  விருது அளிக்க வேண்டும் எனும் யோசனை உதித்தது. விருது தொகை பெரிதில்லை என்றாலும் ஒரு சிறிய ஊக்கத்தை அளிக்கும், நாளடைவில் இத்தொகை இதற்கென உருவாக்கப்படும் வைப்பு நிதியிலிருந்து வளரக்கூடும்.

நவீன காலகட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளின் மிக முக்கியமான சவால் என்பது அறிவியலுடன் அதுகொள்ளும் உறவே. அனுபவபூர்வமாக நிறுவினால் போதாது, அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டிய நிர்பந்தம் நமக்கிருக்கிறது. அறிவியல் அழுத்தம் சரிவர எதிர்கொள்ளப்படவில்லை என்றால் நாம் நாளடைவில் பாரம்பரிய இந்திய மருத்துவத்தை முற்றிலுமாக இழந்துவிடக்கூடும். அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்ட பகுதிகள் நவீன மருத்துவத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கிகொள்ளப்படும்.

இந்திய மருத்துவத்துறை மருத்துவர்களிடம் சில வினோதமான முரண்பாடுகளை நாம் காண முடிகிறது. ஒருபுறம் எங்கள் மருத்துவத்துறை மிகவும் தொன்மையானது, மிகவும் உயர்ந்தது என்று பேசிக்கொண்டே மறுபுறம் நவீன மருத்துவம் புரிவதற்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பது. இருவிதமான நம்பிக்கை சிறைகளில் நாம் அடைப்பட்டு இருக்கிறோம். நவீன மருத்துவம் கேடானது, பாரம்பரிய மருத்துவம் உயர்வானது என்பது ஒருநிலை நவீன மருத்துவம் உயர்ந்தது பாரம்பரிய மருத்துவம் வெறும் மூட நம்பிக்கைகளின் தொகை. நமது இறுகிய நம்பிக்கைகள் நம்மை உண்மைக்கு அருகே அழைத்து செல்வதில்லை. நமக்கு வசதியான வெளியை விட்டு வெளியே வந்து ஆய்ந்து நோக்குவதற்கு நாம் தயாராக இல்லை.

இந்நிலையில் இந்த விருது இந்த எல்லையை உணர்ந்து தமது எல்லைகளை விஸ்தரிக்க முயலும் நவயுக இந்திய மருத்துவர்களுக்கானது. அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கம். காழ்ப்பும் பற்றும் இன்றி துறை அறிவுடன் இரண்டு மருத்துவ துறைகளையும் ஒருங்கே நோக்கும் மருத்துவர்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்விருதுக்கான இந்த அளவுகோலின் படி நாங்கள் பரிசீலித்த நான்கைந்து பெயர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் டாக்டர்.திரு நாராயணன்.  தொடர்ந்து அறிவியல் பூர்வமான சித்த மருத்துவத்தை அவருடைய ctmr அமைப்பு மூலம் முன்னெடுத்து வருகிறார். பாட திட்டங்களை வடிவமைப்பது, ஆய்வு முன்வடிவை வரையறுப்பது, பண்டைய மருத்துவ ஆவணங்களை காப்பது, நவீன வாழ்வின் தேவைகளுக்கு ஏற்ப சித்த மருத்துவ புத்தகங்களை பதிப்பிப்பது என்று பல தளங்களில் தொடர்ந்து பங்களிப்பு ஆற்றி வருகிறார்.

‘இந்திய மருத்துவத்திற்கான வாழ்நாள் பங்களிப்புக்கான’ அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியர் விருதை நாங்கள் அவருக்கு அளிப்பதன் மூலம் இவ்விருது பெருமை கொள்கிறது.


Sunday, 18 June 2017

கட்டுரை போட்டி முடிவுகள்

அரிமளம் வைத்தியசாலை சார்பாக அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியர் நூற்றாண்டை ஒட்டி "இந்திய மருத்துவத்தின் நிகழ்கால சவால்களும் தீர்வுகளும்" எனும் தலைப்பில்  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ இளநிலை மாணவர்களுக்கான கட்டுரை போட்டி அறிவிக்கபட்டிருந்தது. எல்லா கல்லூரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் போட்டி அறிவிப்பைப்பற்றி கடிதங்கள் அனுப்பபட்டிருந்தன. மீண்டும் ஒருமுறை தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஒரு பெரும் மவுனமே விடையாக கிடைத்தது. மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பதால் அறிவித்த மூன்று பரிசுகளுக்கு மாற்றாக இரு பரிசுகளுடன் நிறுத்தி கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். 

இவ்விரு கட்டுரைகளிலும் சில பிழை புரிதல்கள், மிகைகள் உள்ளன எனினும் எங்களுக்கு கிடைக்க பெற்றவைகளில் இவையே சிறந்தவை என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து ஏதுமில்லை. இரண்டு கட்டுரைகளுமே தீர்வுகளை காட்டிலும் தற்கால சிக்கல்களைப் பற்றிய நல்ல புரிதலுடன் எழுதபட்டுள்ளன. 

வெற்றியாளர்களுக்கு ஜூலை 15 அன்று காலை இந்திய மருத்துவ விவாத அரங்கின் போது பரிசுகள் அளிக்கப்படும். இவர்கள் எழுதிய கட்டுரைகள் விரைவில் தளத்தில் ஏற்றப்படும். 

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். 

முதல் பரிசு - அரிமளம் டாக்டர் ராமச்சந்திரன்  நினைவு பரிசு - .ரூ.5000, 
பி.சங்கமித்திரை 
இறுதியாண்டு ஆயுர்வேத பட்டபடிப்பு, 
தர்மா ஆயுர்வேத கல்லூரி 
ஸ்ரீ பெரும்புதூர் 

இரண்டாம் பரிசு ரூ. 3000
ஜெ.இதய தீபன் 
மூன்றாம் ஆண்டு ஆயுர்வேத பட்டபடிப்பு 
தர்மா ஆயுர்வேத கல்லூரி.  
ஸ்ரீ பெரும்புதூர் 

Thursday, 13 April 2017

Arimalam Ramakrishna vaithiyar award for excellence in Indian medicine 2017 - announcement

Commonly known by the name of Arimalam mani Iyer, which is actually the name of his father Subramaniyan, Shri. Ramakrishnan was born on the year of 1917. He belonged to a lineage of Siddha physicians. It was customary to learn from the parents. His father was his guru. He established himself as a reputed Siddha physician at Arimalam, a small village in pudhukottai district. This year 2017 falls to be his centennial; birth anniversary. It has been decided to instill an award in his name for excellence in contribution of Indian system of medicine. 
Award was decided on feedback and assessment from ground level. Few genuine contributors were short listed from both Siddha and Ayurveda system of medicines. Tamil Nadu residence/ origin was decided as an important criteria for the award. Dr. Thiru Narayanan ,Dr. L. Mahadevan, Dr. Sri Ram, Dr. Siva Raman were the final shortlisted names. After careful discussion, we are happy and proud to inform that the  inaugural 2017 edition  'Arimalam Ramakrishna vaithiyar award for excellence in Indian medicine' shall be given to Siddha physician Dr. Thiru Narayanan. 

Award function will be held at Arimalam, in the presence of various important personalities,  on july 15 th of 2017. 

Profile of Dr. Thiru Narayanan    

                              

Dr.T.Thirunarayanan, an alumnus of the Govt. Siddha Medical College, has 28 years of experience in different spheres of Indian Systems of Medicine including teaching, training, clinical and industrial research.

கட்டுரைப் போட்டி அறிவிப்பு

வணக்கம்,
வருகின்ற ஜூலை 15,16 ஆகிய தேதிகளில் புதுகோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரிமளம் வைத்தியர் ராமகிருஷ்ணன் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தீர்மானித்து இருக்கிறோம். அரிமளம் வைத்தியர் என இப்பகுதியில் பரவலாக அறியப்பட்டவர் இப்பகுதியில் சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக சிறந்த முறையில் புரிந்து வந்தவர்.
இந்த விழாவையொட்டி தமிழகத்தை சேர்ந்த  இந்திய மருத்துவ முறைகளுக்குபங்காற்றியவர்களை கவுரவிக்கும் முகமாக ஆண்டு தோறும் ஒரு விருது வழங்க முடிவெடுத்துள்ளோம். அதேபோல் இளநிலை சித்த/ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகளுக்கு ஓர் கட்டுரை போட்டியையும் வருடம் தோறும் நடத்த முடிவெடுத்துள்ளோம். அவ்வகையில் இவ்வாண்டுக்கான தலைப்பு இந்திய மருத்துவத்தின் நிகழ்கால சவால்களும் தீர்வுகளும்”. நீண்டகாலமாக பல்வேறு வகைகளில் விவாதிக்கப்படும் தலைப்புதான் எனினும், தற்கால மாணவர்களின் சிந்தனையை அறிந்துகொள்ளும் மற்றொரு முயற்சி மட்டுமே.

Monday, 8 September 2014

Prabodhan 2014- Speech at S-VYASA, bengaluru on 6-9-14

Asathoma sadh gamaya
Thamasoma jothir gamaya
Mruthyorma amrutham gamay

Let the light of knowledge surround us and illuminate us, guide us, piercing the dark.

Good evening friends, it feels great to meet all of you, and I am really thankful to the prithvi community of friends, who in an informal way have been succesfully organising prabodhan for some years now. It feels good to be associated with good people. I thank them for the opportunity.

Sunday, 31 August 2014

Modern ayurveda - 1

In one of the very first introductory sessions one of our lecturer warmly welcomed ‘welcome to the museum..whatever you read, learn is all history, which has very minimal relevance to your life and future’ I was shocked. What am I doing here?

And all these years we have been taught the atmosphere is composed of carbon, oxygen, nitrogen and hydrogen. Human body consists of 206 bones, there is blood, lymph, muscles, brain, spine, heart, lungs in it.  That’s what science is all about, that’s how we have been taught. Suddenly you are being told that this universe or prapancham is composed of 5 mahabhutas. And you have thri doshas, 7 dhatus in your body. I was bewildered, confused.

Saturday, 25 January 2014

ரசாயனமும் முதுமை மருத்துவமும் - 2

வயோதிக பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் எவ்வாறு உதவும் எனும் கோணத்தில் சென்ற பதிவில் எழுதியிருந்ததன் நீட்சி தான் இந்த பதிவு. முன்னரே குறிப்பிட்டது போல் வயோதிகத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான முயற்சி இளமையில் இருந்தே தொடங்க வேண்டும். பஞ்ச கர்ம சிகிச்சைகளை செய்துகொண்டு தோஷங்களை அவ்வப்போது வெளியேற்றி, உணவு பழக்கங்களை உரிய முறையில் வரையறை செய்துக்கொண்டு உடலை பேணுவது முக்கியம். சரகர் சொல்கிறார், “சர்வம் அன்யேத் பரித்யஜ்ய சரீரம் அனுபாலயேத்” – எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு உடலை பேணுவதற்கு நாம்  முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். 

Sunday, 29 December 2013

ரசாயனமும் முதுமை மருத்துவமும்


காலம் வழிந்தோடி தீர்ந்து மறையும் தருணத்தில் நம் முன் வந்து நிற்பவன் தான் காலன். வாழ்வின் அத்தனை மகத்துவங்களும் ஒரு நாள் முடிவுர வேண்டும். அறிய முடியாத வாழ்வின் அடுத்த பக்கமாக வரும் மரணத்தை மனிதன் என்றேனும் வாசித்து தான் ஆக வேண்டும், இயற்கையுடன் போரிட்டு மரணத்தை வெல்வதல்ல ஆயுர்வேதத்தின் நோக்கம். வாழும் காலத்தில் வீடுபேறு நோக்கி முன்னகர்ந்து ஆன்மாவின் அழியா தன்மையை உணர்ந்து அறிவதே அதன் நோக்கம். தர்ம அர்த்த காம மோக்ஷம் எனும் நான்கு புருஷார்தங்களை அடைவதற்கு ஆரோக்கியம் அவசியம் என்கிறார் சரகர்.அதற்கு தேவையான ஆரோக்கியத்தை பேணும் வழிமுறைகளை சொல்வதே ஆயுர்வேதத்தின் நோக்கம் என்கிறார். முதிர்ந்த வயதில் பலவீனமான உடலை உகுத்து வேறோர் உடலில் புகுந்து ஜனன மரண சுழலில் உழல்கிறது நம் ஆன்மா என்கிறது கீதை. பசி, நீர் வேட்கை, தூக்கம், வயோதிகம் ஆகியவை மனிதன் தவிர்க்க முடியாத பிணி என்கிறது ஆயுர்வேதம். 

Wednesday, 18 December 2013

rutu chakra - 2

Rutukala- Proliferative phase
The Proliferative phase is for 12 to 16 days. The day starts from the 4th day and may extend up to 18th day of menstrual cycle. This phase includes ovulation. However ovulation may be absent in some exceptional cases. The sperm get deposited in the uterus for conception like a seed which is likely to bear. Hence this phase is termed as rutukala.

On fourth day after taking head bath, the woman has to wear white or new garments, flowers and ornaments, worship and then she has to see her husband in white garments. This shows reflection upon the child. Ayurveda believes whenever the woman sees her husband with love and affection on the fourth day, the child will have similar feature, character, etc. It is believed to enhances the ovulation.

Rutumathi means ovulating woman, the woman who is in her proliferative phase. Ayurveda has defined some special characteristic features for the ovulating woman. During this period, she looks bright and healthy, her mouth and teeth moist, anxious to hear love stories, her flanks, eyes and hair are lax, she has twitching over arms, breasts, pelvis, umbilicus, thighs and hip. 

As lotus closes after the Sun set, the cervix of the uterus also gets constricted after ovulation. This prevents the entry of Sperms. Hence this is considered as the phase of conception.

Ayurvedic treatments like kshara karma and Nasya are contraindicated during this phase. 

Rutuvyathitha kala – secretary phase or post ovulatory phase.

The secretary phase or the post ovulatory phase is responsible for the formation of next menstrual cycle or fertilization. During this phase, the uterine wall get thickens for the purpose of conception. Simultaneously, fertilization takes place in the presence of sperm and the ovum. After fertilization, the embryo takes its suitable place in the uterine wall for the development of the fetus. Thus it results in conception. In the absence of fertilization, the matured ovum waits for the next phase to get expelled off.

Thursday, 5 December 2013

Rutu chakra

Menstrual cycle, Rutu chakra in Ayurveda is the natural physiology in woman. It is the cycle of changes that occur in uterus and ovary resulting in menstrual bleeding for the purpose of reproduction. It begins at the age of 12 and ceases at 50 approximately. This time line is called as Menarche – menopause and it is the reproductive period in  woman.

Healthy menstruation is the evidence for health of woman. When the woman is healthy, she can give birth to healthy child. Right from the birth, a girl child is responsible to care for the healthy future generations. During Menarche, there will be gradual growth of pubic and axillary hair; there will be development of breasts, uterus and vagina along with vulva.

Menstrual cycle has three phases. They are
1.     Rajasrava kala – bleeding phase
2.     Rtu kala – ovulatory phase
3.     Rtuvyathitha kala – secretory phase

Rajasrava kala is known as bleeding phase in Ayurveda. The day of onset of menstrual bleeding is considered as the first day out of 28 days menstrual cycle. Duration of menstrual bleeding is averagely 3 to 5 days. The blood collected for the whole month by the vessels of uterus and endometrial capillaries are expelled out through the vaginal opening by the vayu. The amount of blood flow is 4 anjali pramana (ie, approximately 4 ounces it is 120 ml. interestingly ayurveda uses subjective measuring parameter – hence here anjali refers to the quantity that can be filled in the one’s own palms). The menstrual blood remains sight black in colour and odourless.

According to Ayurveda, the characteristics of normal menstruation

Menstruation up to 7 days with 30 to 120 ml of blood which resembles lac juice, red lotus flower, rabbit’s blood and devoid of pain, burning sensation, unctuousness is normal.

Mode of life during menstruation mentioned in various texts of Ayurveda

The woman during menstrual bleeding should avoid day sleeping, application of collyrium, shedding of tears, ablution, bathing, and anointing, massaging, paring of nails, fast racing, laughing, listening to many topics (unnecessary talks), combing and excessive exercise. She should also avoid wearing ornaments, purificatory treatments like nasya, swedana and vamana, food items with pungent, salt and hot. She should sleep on the bed made of darbha and eat meal made of ghee, rice and milk or barley and milk.

Now days, some of  these restrictions are possible to follow and some are impossible. The restrictions like to avoid shedding tears, laughing and unnecessary talks may help to recover mood swings during menstruation. Directly or indirectly Ayurveda has indicated rest. Rest during menstruation may help to avoid menstrual pain, low back pain, etc. Eating habit is very important part during menstruation. Some of them like to take lot of food, some of them may not. Taking healthy food is very important during this time. When the person takes hot and spicy food, it increases burning sensation and painful menstruation. 
-Dr.Manasa Suneel Krishnan 

Friday, 29 November 2013

ஷாலக்கியம் - 2

சென்ற பதிவில் ஷாலக்கிய பிரிவின் முக்கியத்துவத்தை பற்றி எழுதியதன் தொடர்ச்சியே இந்த பதிவில் இடம்பெறுகிறது. ஷாலக்கிய பிரிவின் முக்கியமான மருத்துவர் என்று ஜனகரையும் நிமியையும் போற்றுகிறது ஆயுர்வேதம். நிமி எனும் அரசன் ஜனகனின் குலத்தில் அவனுக்கு முன்னரே தோன்றியவன். நிமி உடலை விட்டு கண்ணிமையில் புகுந்து கொண்டார். தேகம் இல்லாதவன் என்பதே விதேஹம் என்று ஆனது. விதேக தேசம் அப்படி உருவானது தான். விதேக தேசத்து பெண் என்பதால் சீதைக்கு வைதேகி என்றொரு பெயர் உண்டு. கண்ணிமையில் உள்ள நிமியின் காரணமாகவே கண் சிமிட்ட முடிகிறது என்றொரு தொன்மம் உண்டு. அப்படி சிமிட்டும் செயலை தான்  நிமிஷா என்றழைக்கிறோம்.  அதுவே மருவி நிமிடம் என்றாகிவிட்டது. 

Friday, 22 November 2013

Painting white

Self hygiene is the basic thing which keeps us healthy physically and socially. Hygiene is the only thing that gives an impression, before the person we meet. Naturally when oral hygiene of a person is poor, we hesitate to talk. So, brushing teeth plays a major role. In health point of view, good oral hygiene leads to good health. And it is considered as a daily regimen.  


Ayurveda has given a different angle towards the knowledge of brushing. It says, when a person wake up, he must analyze himself deeply whether the food consumed in the previous night has been digested. After confirming that it has been digested, he can come out of the bed and begin with the routine life. The person has to eliminate the feces and urine before brushing. Now he is eligible for brushing teeth. 

Monday, 18 November 2013

ஷாலக்கியம் - 1

அஷ்டாங்க ஆயுர்வேதத்தின் (ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகள்) மற்றுமொரு மிக முக்கியமான பிரிவு ஷாலக்கியம். ஷாலக்கியம் எனும் பிரிவு கழுத்து பகுதிக்கு மேலுள்ள உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவாகும். கண், காது, மூக்கு, பல், வாய், தொண்டை, தலை என கழுத்துக்கு மேலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியது. எண் ஜான் உடலிற்கு சிரசே பிரதானம் என ஒரு வழக்கு புழங்குவதை நாம் அறிவோம். சிரஸ் ஒரு வர்ம ஸ்தானம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. 

Saturday, 9 November 2013

Shat kriya kala, an approach towards disease manifestation


Diseases are of four types. Some diseases are easily curable, curable with difficulty, some can be managed and some of them are incurable. But there is an approach towards understanding the progress of disease manifestation. It is called as Shatkriya kala. Whereas Shat means six, kriya is action and kala indicates time. So, Shat kriya kala means six different stages of a disease. This understanding is very useful clinically.