கனிமங்களையும், உலோகங்களையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் பிரிவை ரச சாத்திரம் என அழைக்கின்றனர். அறுவை சிகிச்சை வலுவாக பழகபட்ட காலத்தில் இந்தியா முழுவதும் பௌத்தமும் சமணமும் செல்வாக்குடன் பரவியது. அதை ஒட்டி , அறுவை சிகிச்சை ஒரு விதமான ஹிம்சை எனும் நம்பிக்கை ஏற்பட்டது, ஆகவே அதற்கு மாற்றாக, அதை காட்டிலும் விரைவாக செயலாற்றும் ஓர் மருத்துவ முறைக்கான தேடல் ரச சாத்திரத்தில் வந்து நின்றது.