வாத, பித்த, கபம் ஆகியவைகள் முக்குற்றம் அல்லது திரிதோஷம் என்று அழைக்கப்படுவதுப் போல், வியர்வை (ஸ்வேதம்). மலம் மற்றும் மூத்திரம் மூன்று கழிவுகள் என்று கருதப்படுகின்றன. தோஷங்கள் கூட கழிவுகளாகவே சொல்லப்படுகிறது. நாம் உட்கொள்ளும் ஆகாரம் எப்படி செரிமானம் ஆகிறது என்பதைப் பற்றி ஆயுர்வேதம் விரிவாக விளக்குகிறது. ரசம், ரக்தம், மாம்ச, மேதஸ், மஜ்ஜா. அஸ்தி மற்றும் சுக்கிரம் என ஏழு தாதுக்கள் நம் உடலில் உள்ளன.