Thursday, 3 October 2013

மனம்

மனம் ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அறிதலுக்கு உதவும் ஞானேந்திரியமாகவும், செயலாற்றும் கர்மேந்திரியமாகவும் அது அறியப்படுகிறது. ஆகவே ஐந்து ஞான இந்திரியங்கள், ஐந்து கர்ம இந்திரியங்களை தவிர்த்து பதினோராவது உபய இந்திரியமாக மனம் முன்வைக்கப்படுகிறது. மனதிற்கும் உடலிற்குமான தொடர்பை ஆயுர்வேதம் தெளிவாகவே வரையறுக்கிறது. இன்று psycho- somatic disorders என்று அறியப்படும் கருதுகோள் பற்றிய புரிதல் ஆயுர்வேதத்தில் என்றும் இருப்பது தான். மன நோய் என்று தனியாக பிரித்து பார்க்காமல், உடலில் உள்ள ஒவ்வொரு நோயை பற்றி விளக்கும் போதும் அதன் காரணமாக மனம் சார்ந்த ஏதோ ஒன்று தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தோல் நோய்கள், வாத நோய்கள், மேக நோய்கள், சுவாச நோய்கள் என பல நோய்களை பற்றிய அத்தியாயங்களில் நாம் இதை காணலாம். 
thanks