வயோதிக பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் எவ்வாறு உதவும் எனும் கோணத்தில் சென்ற பதிவில் எழுதியிருந்ததன் நீட்சி தான் இந்த பதிவு. முன்னரே குறிப்பிட்டது போல் வயோதிகத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான முயற்சி இளமையில் இருந்தே தொடங்க வேண்டும். பஞ்ச கர்ம சிகிச்சைகளை செய்துகொண்டு தோஷங்களை அவ்வப்போது வெளியேற்றி, உணவு பழக்கங்களை உரிய முறையில் வரையறை செய்துக்கொண்டு உடலை பேணுவது முக்கியம். சரகர் சொல்கிறார், “சர்வம் அன்யேத் பரித்யஜ்ய சரீரம் அனுபாலயேத்” – எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு உடலை பேணுவதற்கு நாம் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும்.